Sunday, April 12, 2020

Reasons for Gender inequalities.

பாலின பாகுபாடு அல்லது சமத்துவமின்மைக்கான காரணங்கள்.

    பாலின பாகுபாடு எவ்வாறு எழுகிறது, அது ஏன் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது, சமூகங்கள் முழுவதும் அது ஏன் வேறுபடுகிறது, பாலின சமத்துவமின்மையைச் சேர்க்கும் கூறுகள் என்ன, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் அதற்கு எவ்வாறு பங்களிக்கின்றன, அது எவ்வாறு மாறுகிறது? என்பன பற்றி இக்கட்டுரையில் காண்போம். 
பாலின சமத்துவமின்மையில் நாம் கவனம் செலுத்துகையில், சமூக காரணத்தை பொதுவாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். சமூக காரணங்கள் செயல்படும் பல்வேறு வழிகளையும், முக்கியமான சமூக நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை எவ்வாறு அடையாளம் காணலாம் என்பதையும் ஆராய்வோம்.
பாலின பாகுபாடு  விளக்கம்.
வாய்ப்புகளையும் வள ஆதாரங்களையும் பெறுவதில் பெண்களுக்கு உள்ள சமத்துவ நிலையை மதிப்பிடுவதே  ஒரு நாடு தனது குடிமக்களை முன்னேற்றுவதில் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கான அறிவியல் பூர்வமான வழிமுறை ஆகும். பெண்கள் முன்னேற்றம் என்பது கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தே அமைகிறது. அனால் அந்த வாய்ப்பு பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை.  எல்லா   விதத்திலும் பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே  மதிப்பிடப் படுகின்றனர். அரசியல் அமைப்பின்படி ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் சமமாக வழங்கப்பட்ட உரிமையானது பெரும்பாலான நேரங்களில்  பெண்களுக்கு சமுதாயத்தால் மறுக்கப்படுகிறது. இதுவே பாலின பாகுபாடு ஆகும்.

பாலின பாகுபாட்டிற்கான காரணங்கள்.

1. மரபு


மரபு என்பது நெடுங்காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கமாகும். இத்தகைய மரபின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் ஆண்களுக்கு  பணிவிடை செய்பவர்களாகவும் அடிபணிந்து செல்பவர்களாவுமே இருந்து வந்திருக்கின்றனர். குடும்பத்தின் தலைவன் ஆண், பெண்கள் ஆண்களுக்குக்  கட்டுப்பட்டவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது.

3. உடல் ரீதியிலான காரணங்கள்


உடல் ரீதியில் பெண்கள் ஆண்களைவிட வலிமை குறைந்தவர்களாவே இருக்கின்றனர்.  இதன் காரணமாகவும் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே  இருந்து வந்திருக்கின்றனர். 

4. சமூக காரணங்கள் 


      சமூகத்தில் ஆண்  குழந்தைகளுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் பெண் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. குடும்பங்களில் ஆண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாவும் ஆண்கள் வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.  பெரும்பாலும் பெண்கள் வீட்டின் செலவாகவும் ஆண்கள் வரவாகவும் பார்க்கப்டுகின்றனர்.

5. பொருளாதார  ரீதியிலான காரணங்கள்


பெரும்பாலும் ஆண்களே ஒரு குடும்பத்தின் பொருளாதார மையமாகத் திகழ்கின்றனர்.  பொருளீட்டுதல் பொருளாதார ரீதியில் குடும்பத்தை மேம்படுத்துதல் ஆகிய வேலைகளை பெரும்பாலும் ஆண்கள் செய்வதால் ஆண்களே பெண்களை விட உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். 

6. அரசியல் காரணங்கள்


நெடுங்காலமாகவே இந்தியாவில் ஆண்களுக்கே வாரிசு உரிமை வழங்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பின்படி அனைவரும் சமம் என்றாலும் நடைமுறையில் ஆண் பெண் பாகுபாடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. போதுமான அளவு பிரதிநிதித்துவம் அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணம். எனவேதான் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது இன்றளவும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. 

No comments:

Post a Comment

 நம் "தமிழ்ப் புத்தாண்டு" வரலாற்றை  அறிந்து கொள்ள... சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் உறவுகளே!  தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத...